Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 47:18:27

47:18:27

காண்டம் 47, மண்டலம் - 18, நாள் உரைக்கோவை வாசகமலர் 27

பெண்களை மறந்தோ அல்லது துறந்தோ அல்லது மறுத்தோ அல்லது வெறுத்தோ அல்லது எதிர்த்தோ அல்லது இழித்துப் பழித்துப் பேசியோ அல்லது தீட்டு என்று விலக்கியோ, ஒதுக்கியோ தள்ளுவது சிவபெருமான்களாலும், அவர்களது துணைவியர்களாலும், மாயோன்களாலும், அவர்களின் துணைவியர்களாலும், பிறமண்களாலும், அவர்களது துணைவியர்களாலும், வருணதேவன்களாலும் அவர்களின் துணைவியர்களாலும், இந்திரன்களாலும், அவர்களின் துணைவியர்களாலும், இறமண்களாலும், அவர்களின் துணைவியர்களாலும், முருகனாலும், முருகனின் துணைவியர்களாலும், பிள்ளையாராலும், பிள்ளையாரின் துணைவியர்களாலும், கணபதியாலும், கணபதியின் துணைவியர்களாலும், வினாயகராலும், வினாயகரின் துணைவியர்களாலும், ஐயனார்களாலும், ஐயனாரின் துணைவியர்களாலும் இப்படி இந்துமதத்தை சேர்ந்த எல்லா ஆண் கடவுள்களும், பெண் கடவுள்களும் பெண்களை அவமானப் படுத்துவதையும், இழிவு படுத்துவதையும் பூசையிலிருந்து ஒதுக்குவதையும், தீட்டு, துலக்கு, விலக்கு உரியவர்கள் என்று ஒதுக்குவதையும் பெரிய பாவம் என்றும், சாபம் என்றும் கண்டிக்கிறார்கள்.

பெண்களே அருளுலகின் விழியாக, வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாக, வழிப்பயனாக இருக்கிறார்கள் என்பதுதான் இந்துவேதத்தின் சாரம். இந்துமதத்தின் செயல்திட்டம்


மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே