01:47:03
இருக்கு வேதம் காண்டம்-1, மண்டலம்-47, நாள் உரைக்கோவை வாசகம்-3
(iii) கருமுறை: ‘அவரவர் விருப்பத்திற்கும், வசதி வாய்ப்பிற்கும், சூழ்நிலைக்கும், துணைக்கும், ஏந்திற்கும் ஏற்ப; கிடைக்கக் கூடிய விருப்பமான உயிரினங்களின் குருதியும், சமைத்த இறைச்சியும், ஊண்சோறும் படைத்து தம் விருப்பம்போல் குரல் எழுப்பியும், பாடல் பாடியும், கருவிகளை இசைத்தும், ஆட்டங்கள் ஆடியும் அருளுலகத்தவரிடம் பத்தி செலுத்தும் பத்தி நெறிமுறை வழியே கருமுறை’.