04:11:26
இருக்கு வேதம் காண்டம்-4, மண்டலம்-11, நாள் உரைக்கோவை வாசகம்-26
“அண்டபேரண்டமாளும் மூலப் பதினெண்சித்தர்கள், இந்துவேத நூல்களையும், இந்துமத நூல்களையும், இப்பூவுலக மானுட வாழ்வின் கண்களாக, பூசைக்குரிய மலர்களாகத் தோன்றியுள்ள மகளிரின் வாழ்க்கை, ஆண் எனும் கொழுகொம்பைப் பற்றிப் படரும் கொடி போல் அமையக் கூடியது என்பதால்; ஆண்பெண் இருபாலருக்கும் உரிய விண்மீன் பாதிப்புகள், இராசி கோள்நிலைப் பாதிப்புகள், நாகப்பாதிப்பு, ஊழ்வினைப் பாதிப்புகள், மற்ற அருளுலகப் பாதிப்புகள் அனைத்துக்கும் உரிய பரிகாரங்களைச் செய்த பிறகே; பெண்ணின் இல்வாழ்க்கை அமைய வேண்டும். ஆணுக்குக் கடுமையான பாதிப்பு வெளிப்படையாகத் தெரிந்தால் மட்டுமே உரிய பரிகாரங்களைச் செய்தபிறகு இல்வாழ்க்கை அமைய வேண்டும்,” என்று அருளியுள்ளனர்.