Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 32:36:46

32:36:46

இருக்கு வேதம் காண்டம்-32, மண்டலம்-36, நாள் உரைக்கோவை வாசகம்-46
“அருளுலகிலுள்ள 8,84,736 வகைப்பட்ட கடவுள்களிடத்தும், பத்தி செலுத்தி சத்தி, சித்தி, முத்திகளைப் பெற்றிடும் சாதனையாளர்கள் சாதுக்களாவார்கள். இந்த சாதுக்களின் வழித்தோன்றல்கள் தங்களுடைய ஆதியாக இருக்கின்ற சாதுக்களின் பெயரைக் குறித்து ‘தாங்கள் குறிப்பிட்ட சாதுக்களை ஆதியாக உடையவர்கள்’ எனும் பொருளை உடைய சொல்லான ‘சாதி’ எனும் பிரிவை இந்துவேதத்தில், இந்துமதத்தில் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளனர் என்பதால்; ‘முன்னோர் வழிபாடும் மூத்தோரை மதித்தலுமே இந்துவேத சாரம்’ என்ற தத்துவம் செயலாகிறது. இது, சமுதாயம் எனும் ஆலமரத்தின் எண்ணற்ற வேர்களாக இருந்து சமுதாயக் கட்டுக்கோப்பைப் பாதுகாத்திடப் பயன்பட்டிடல் வேண்டும்”.


மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே