Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 08:15:32

08:15:32

இருக்குவேதம் காண்டம்-8, மண்டலம்-16, நாள் வாசகம்-32

“இம் மண்ணுலகம் நெருப்புக் கோளமாகவும், பனிக் கோளமாகவும், நீர்க் கோளமாகவும் இருந்து கல்லும் மண்னும் தோன்றிட ஆரம்பித்த காலத்தில் இருந்தே பொருள் அணுக்களும், அருள் அணுக்களும், உயிர் அணுக்களும், மெய் அணுக்களும், படிப்படியாகத் தோன்றி உயிர்மெய் அணுக்கள் வடிவப்பட்டுப் பயிரினங்களும், உயிரினங்களும் காலப் போக்கில் தோன்றின. அக்காலக் கட்டங்களிலேயே அருவங்கள், அருவ உருவங்கள், உருவ அருவங்கள், உருவங்கள் என்று நான்கு வகையான வடிவமைப்புக்களை உடைய அருளுலகத்தவர்கள், இம்மண்ணுலகில் நீர்ப் பரப்புக்கிடையில் இருந்திட்ட எல்லா வகையான நிலப்பரப்புக்களிலும் பயிரினங்களையும், உயிரினங்களையும் போல் வகைவகையாகத் தோன்றினார்கள். இவர்களை யெல்லாம் உண்–ழிகளில் தங்கச் செய்து, இவர்களின் வகைகளைப் பட்டியலிட்டு, இந்த அருளுலகத்தவர்கள் கடவுள்கள் என்ற பொதுப் பெயரில் மொத்தம் எட்டு இலட்சத்து எண்பத்து நாலாயிரத்து எழுநூற்றி முப்பத்தாறு (8,84,736) வகைப்படுவர் என்ற கணக்கு வழங்கப்படுகிறது. இவர்கள் எந்தெந்த நாட்டு எல்லைக்குள், எந்தெந்த இனத்தவர்களுக்கிடையில், எந்தெந்த மொழியினர் வாழும் பகுதியில் இயற்கையாகப் பிறப்பெடுத்தார்களோ! பிறப்பெடுக்கிறார்களோ! பிறப்பெடுத்தார்களோ! அந்தந்த நாட்டவருக்கும் இனத்தவருக்கும் மொழியினருக்கும் மட்டுமே உரியவர்களாகிவிடுவார்கள். எனவே ஒவ்வொரு நாட்டவருக்கும் ஒவ்வொரு இனத்தவருக்கும் ஒவ்வொரு மொழியினருக்கும் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில், நூறாயிரக் கணக்கில், ஆயிரக் கணக்கில், நூறாயிரக் கணக்கில் தனிப்பட்ட கடவுள்கள் தான் உண்டு. இக்கடவுள்கள் தங்களுடைய நாட்டவருக்கும், இனத்தவருக்கும், மொழியினவருக்கும் மட்டும் தான் உதவுவார்கள்.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே