Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 01:08:28

01:08:28

இருக்கு வேதம் காண்டம்: 1, மண்டலம்:8, நாள் உரைக்கோவை வாசக மலர்: 28

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கைக்குரிய எல்லா வகையான உரிமைகளையும், பெருமைகளையும் தன்னுடைய தந்தை வழியாகவே ஏற்றுக் கொள்கிறான் என்பதனால் இந்தக் குடும்ப ஆண்டவர்கள்;
(1) இன்றைய தந்தை, தந்தையால் உருவாக்கப் பட்டிட்ட தாய், உடன் பிறந்தவர்கள் எனும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் யாராவது மாண்டு ஆண்டவராக ஆகியிருந்தால், அவர்கள் 'முதல் தலைமுறை ஆண்டவர்கள்' எனப்படுவார்கள்.
(2) இந்த அப்பாவின் அப்பா, அதாவது, தாத்தா தாத்தாவால் உருவாக்கப் பட்டிட்ட தாத்தாவின் மனைவிகள், தாத்தாவின் பிள்ளைகள் எனும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் யாராவது மாண்டு, ஆண்டவராக ஆகியிருந்தால் அவர்கள் 'இரண்டாம் தலைமுறை ஆண்டவர்கள்' எனப்படுவார்கள்.
(3) இந்த தாத்தாவின் அப்பா (அதாவது பாட்டன்), பாட்டனால் உருவாக்கப் பட்டிட்ட பாட்டனின் மனைவி, பாட்டனின் பிள்ளைகள் எனும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் யாராவது மாண்டு, ஆண்டவராக ஆகியிருந்தால், அவர்கள் 'மூன்றாம் தலைமுறை ஆண்டவர்கள்' எனப்படுவார்கள்.
(4) இந்த பாட்டனின் அப்பா (அதாவது பூட்டன்), பூட்டனால் உருவாக்கப் பட்டிட்ட பூட்டனின் மனைவி, பூட்டனின் பிள்ளைகள் எனும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் யாராவது மாண்டு, ஆண்டவராக ஆகியிருந்தால் அவர்கள் 'நான்காம் தலைமுறை ஆண்டவர்கள்' எனப்படுவார்கள்.
(5) இந்த பூட்டனின் அப்பா (அதாவது ஓட்டன்), ஓட்டனால் உருவாக்கப் பட்டிட்ட ஓட்டனின் மனைவி, ஓட்டனின் பிள்ளைகள் எனும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் யாராவது மாண்டு, ஆண்டவராக ஆகியிருந்தால் அவர்கள் 'ஐந்தாம் தலைமுறை ஆண்டவர்கள்' எனப்படுவார்கள்.
(6) இந்த ஓட்டனின் அப்பா (அதாவது சேட்டன்), சேட்டனால் உருவாக்கப் பட்டிட்ட சேட்டனின் மனைவி, சேட்டனின் பிள்ளைகள் எனும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் யாராவது மாண்டு, ஆண்டவராக ஆகியிருந்தால் அவர்கள் 'ஆறாம் தலைமுறை ஆண்டவர்கள்' எனப்படுவார்கள்.
(7) இந்த சேட்டனின் அப்பா (அதாவது சீயோன்), சீயோனால் உருவாக்கப் பட்டிட்ட சீயோனின் மனைவி, சீயோனின் பிள்ளைகள் எனும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் யாராவது மாண்டு, ஆண்டவராக ஆகியிருந்தால் அவர்கள் 'ஏழாம் தலைமுறை ஆண்டவர்கள்' எனப்படுவார்கள்.

இப்படி குடும்ப ஆண்டவர்கள் என்பவர்கள் ஏழு தலைமுறைகளில் தோன்றுகின்ற அனைவரும் ஆவார்கள்.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே