07:19:27
இருக்கு வேதம் காண்டம்-7, மண்டலம்-19, நாள் உரைக்கோவை வாசகம் 27
“அனைத்து வகையான பயிரினங்களுக்கும், உயிரினங்களுக்கும் தலைவராக, ஈசராக தோன்றிட்ட மணீசர்கள்; தங்கள் விருப்பம் போல் கண்டதையெல்லாம், விரும்பியதையெல்லாம் உண்டு நோயுற்று அவதிப்பட்டதால், அண்ட பேரண்டங்களிலிருந்து வந்திட்ட அருளுலகத்தவர்கள் பரந்து பட்ட இப்பூவுலகில் வாழுகின்ற வெவ்வேறு வகையான உடல்கூறுகளுடைய மானுட இனத்தார்கள் தங்கள் தங்களுடைய வட்டாரங்களில் இயற்கையாகக் கிடைக்கக் கூடிய பயிரினங்களிலும், உயிரினங்களிலும் எவையெவற்றை எப்படிச் சமைத்து உண்ண வேண்டும்? எவையெவற்றை எப்படிச் சமைத்து உண்ண வேண்டும்? என்பதை விளக்கிடுவதற்காக உணவுநூல், அடுக்களை சாத்தர, சாத்திர, சாத்திற நூல்கள், மடநூல், சாத்தர, சாத்திர, சாத்திறங்களை என்பனவற்றை மிகத் தெளிவாக திட்டவட்டமாக எழுதி அருளியுள்ளனர். இதன்படி, கூடுமானவரை அந்தந்த நாட்டார், வட்டாரத்தார், இயற்கையாகத் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய பயிரினங்களையும், உயிரினங்களையும் உணவுக்குப் பயன்படுத்துதலே நோயற்ற வாழ்வைத் தரும்”.