Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 01:04:48

01:04:48

இருக்குவேதம் காண்டம்-1, மண்டலம்-4, நாள்வாசகம்-48:

“இப் பூவுலகில், இப் புவிப்பரப்பில், இப்பூமியில், இவ்வையகத்தில், இந்த உலகத்தில், இந்த ஞாலத்தில் முத்தமிழ்மொழி ஒன்றுதான் பல நூறாயிரக் கணக்கான சொற்கள் பிண்டங்களையும், பயிரினங்களையும், உயிரினங்களையும், ஐம்புலன்களால் உணர்ந்தறியக் கூடியவைகளையும், ஆறாவது அறிவுக்கு அப்பாற்பட்டவைகளையும் பெயரிட்டுக் குறிப்பிட்டு பொருள் விளக்கம் தரப்பட்டு இருக்கிறது. ஏனென்றால், இந்த முத்தமிழ்மொழி அண்டபேரண்டங்களை ஆளுகின்ற மூலப் பதினெண்சித்தர்களின் தாய்மொழியாகவும், 1359 அண்டபேரண்டங்களிலும் அருளுலக ஆட்சிமொழியாகவும், அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியாகவும் அருளுலகப் பேருண்மைகளை அநுபவப் பூர்வமாக அறிந்து கொள்ள உதவக்கூடிய ஒரே ஓர் உயர்தனிச் செம்மொழியாகவும் விளங்குகின்றது. இந்த முத்தமிழ் மொழியில் வழங்கப்பட்டுள்ள இந்துவேதம் எல்லா அண்டங்களிலும் இருந்த வேதம், இருந்து வருகின்ற வேதம், இருக்கப் போகின்ற வேதம் என்ற முக்காலப் பொருளின் (வினைத்தொகை) ‘இருக்கு வேதம்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது பதினெண்சித்தர்களால்.”

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே