Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > அறிமுகவுரை

அறிமுகவுரை

பதினெண் சித்தர் மடம்

1. இளைஞர்களாகச் சேர்ந்து உருவாக்கிட்ட இந்த இந்து இலக்கியக் கழகம் இருபதாண்டு காலத்திற்கும் மேற்பட்ட வரலாற்றினை உடையதாகும். இந்த அமைப்பில், தொடர்ந்து பல இளைஞர்கள் பங்கு பெற்று உடலுழைப்பையும், பொருள் உதவியினையும் வழங்கி வந்துள்ள காரணங்களால்தான்; பதினெண் சித்தர் மடத்தில் ஏடுகளிலிருந்து எடுத்து எடுத்து எழுதப்பட்டு எழுத்து மங்கியும், தாள் நைந்தும், சிதைந்தும், அழிந்து கொண்டிருக்கக் கூடிய தமிழ் மொழியின் இலக்கியச் செல்வங்கள் பாதுகாக்கப்படும் பணியும், வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தும் பணியும் நிகழ்ந்து வருகின்றன.

2. பதினெண் சித்தர்களின் படைப்புக்களால் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு எனும் நான்கு வகை வாழ்வியல்களும் செம்மைப் பட்டு உலக ஆன்ம நேய ஒருமைப்பாடு உருவாகிடும். அதன் மூலம் அருளுலகப் பொருளுலக இருள்களும், இன்னல்களும், இடுக்கண்களும், கறைகளும், குறைகளும் பெருமளவில் அகற்றப் பட்டிடும்.

அதற்கு, பதினெண் சித்தர்கள் தருகின்ற வரலாறு, மொழி, இனம், மதம், நாடு, இலக்கியம், மருத்துவம், கவின்கலைகள், ஆயகலைகள், அருட்கலைகள், வானியல், மானுடவியல்.... முதலியவை பற்றிய செய்திகள் உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப் பட்டு பரப்பப் பட்டாக வேண்டும்.

இன்றைய நிலையில் குமரி முதல் வட இமயம் வரை இந்துமதம் யாண்டும் பரவியுள்ள இந்துமத இந்தியாவின் நல்வாழ்வுக்குரிய சாதனைகள் பதினெண் சித்தர்களின் படைப்புக்கள் மூலம் சாதித்துக் காட்டப் பட்டாக வேண்டும்.  அதற்காகத்தான், இம் மண்ணுலகின் முதல் மொழியாகவும், மூல மொழியாகவும் விளங்குகின்ற அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் பதினெண் சித்தர்களின் படைப்புக்கள் விரைந்து விரிந்து வெளியிடப்பட ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன.

இப்பணியை முன் நின்று செய்து வரும் இந்து இலக்கியக் கழகத்துக்கு எல்லோரும் தங்களால் இயன்ற உதவிகளை நல்க வேண்டும் என்று அறிவித்துக் கொள்கிறோம். இந்த இந்து இலக்கியக் கழகம் மாபெரும் வெற்றியினைப் பெறட்டும் என்று வாழ்த்துகிறோம்.

ஞானாச்சாரியார், இந்து வேத பீடம்

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே