Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 01:47:05

01:47:05


இருக்கு வேதம் காண்டம்-1, மண்டலம்-47, நாள் உரைக்கோவை வாசகம்-5
 “பத்தியாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்புகிற குடும்ப ஆண்டவர்கள், குலதெய்வங்கள், கிராமத்து தேவர் தேவதைகள், நாட்டுக் கடவுள்கள் முதலியவர்களிடமும்; அலைந்து திரியும் காற்று, கருப்பு, பேய், பிசாசு முதலியவற்றிடமும் பத்தி செலுத்துவதற்காக தங்களுடைய வசதி வாய்ப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப பலி பொருள்களையும், படையல் பொருள்களையும், மற்ற பூசனைப் பொருள்களையும் படைத்து தம் விருப்பம் போல் குரல் எழுப்பியும், பாடல்பாடியும், கருவிகளை இசைத்தும், ஆட்டங்கள் ஆடியும், பரவிடுதற்குரிய நெறிகளாக பூசைநெறிகள், வணங்கும் நெறிகள், வழிபடும் நெறிகள், கும்பிடும் நெறிகள் எனும் நான்கு வகை நெறிகள் திட்டவட்டமாக விளக்கமாக அருளப்பட்டுள்ளதை தெரிந்து, அறிந்து, ஆராய்ந்து, புரிந்து, தெளிந்து, உணர்ந்து, நம்பி ஏற்று, ஒப்புக்கொண்டு விருப்பத்தோடு செயலாக்குபவர் நிறைவான பயனைத் துய்ப்பர்.”

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே