Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 05:17:16

05:17:16

இருக்கு வேதம் காண்டம்-5, மண்டலம்-17, நாள் உரைக்கோவை வாசகம் 16
இப்பூவுலகத்தார்க்கு, இப்புவிப் பரப்பார்க்கு, இப்பூமியார்க்கு, இவ்வையகத்தார்க்கு, இம்மாஞாலத்தார்க்கு, இவ்வுலகத்தார்க்கு அண்டபேரண்ட அருளாட்சி நிகழ்த்தும் மூலப் பதினெண்சித்தர்கள் அருளிடும் ‘அடிப்படையான அருளுலகப் பேருண்மையானவது; விண்ணுலகிலிருந்து வந்த கடவுள்களானாலும் சரி, மண்ணுலகிலிருந்து உருவான கடவுள்களானாலும் சரி; அவர்கள் முதன்முதல் தங்கிச் செயல்பட்டிடும் நாட்டையும், மொழியையும், இனத்தாரையும், இனத்தாரின் உறவுமுறை, உடைமுறை, உணவுமுறை, கலைமுறை, மற்ற பழக்க வழக்க நெறிமுறை ... முதலியவைகளை மட்டுமே என்றென்றும் விரும்பிடுவார்கள். இதை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அதனால், அந்தந்த நாட்டு மக்கள் தங்களுடைய நாட்டுக்குரிய கடவுளர்களிடத்து மட்டுமே பத்தி செய்து பயனடைய வேண்டும். அந்தந்த இனத்து மக்கள், தங்களுடைய இனத்துக்குரிய கடவுளர்களிடத்து மட்டுமே பத்தி செய்து பயனடைய வேண்டும்; அந்தந்த மொழிக்குரிய மக்கள், தங்களுடைய மொழிக்குரிய கடவுளரிடத்து மட்டுமே பத்தி செய்து பயனடைய வேண்டும்”.
குறிப்பு: இதே கருத்து அசுரவேதம், அதர்வான வேதம், யாம வேதம் மூன்றிலும் மேலும் தெளிவாக விளக்கப் படுகின்றது.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே