02:11:40
இருக்கு வேதம் காண்டம்-2, மண்டலம்-11, நாள் உரைக்கோவை வாசகம்-40:
“இம் மண்ணுலகில் அனைத்து வகைப்பட்ட பயிரினங்களுக்கும், உயிரினங்களுக்கும் தலைவர்களாகத் மணீசர்களைத் திருத்துவதற்காக, 4,85,920 நான்கு இலட்சத்து எண்பத்து ஐயாயிரத்து தொள்ளாயிரத்து இருபது ஆண்டுகள் எனப்படும் நெடிய கால இடைவெளியான அனாதிக் காலத்தில் அண்டபேரண்டங்களிலிருந்து வந்திட்ட அனைத்து வகைப்பட்ட அருளுலகத்தவர்களின் அனைத்து வகையான முயற்சிகளால் இம் மண்ணுலகில் மணீசர்களுக்கிடையில் முப்பத்திமூன்று (33) கோடித் தேவர்கள், ஒரு கோடி தேவதைகள், நாற்பத்தெட்டு (48) கோடி இருடிகள், தொண்ணூற்றாறு (96) கோடி கணங்கள், (108) நூற்றெட்டுக் கோடி முனிவர்கள் என்று இம்மண்ணுலக ஐவர் குழுவினர் தோன்றினர். இவர்கள் சாதித்த சாதனைகளைச் சாதிக்கும் சாதியினர்களாக மணீசரில் ஐந்து வகைப்பட்ட சாதியினர்கள் (பஞ்சமர் = ஐஞ்சாதியினர்) தோன்றினர். இவர்களுள் தேவர், தேவதையினர் என்ற இருவரும் ஒத்த சாதியினர் என்பதால் சாதிகள் நான்காயின.”