Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 07:19:30

07:19:30

இருக்கு வேதம் காண்டம்-7, மண்டலம்-19, நாள் உரைக்கோவை வாசகம் 30
“அண்டபேரண்டமாளும் மூலப் பதினெண்சித்தர்கள் அருட்கொடையாக வழங்கியுள்ள இந்துவேதத்திலும், இந்துமதத்திலும் அறிவுக் கொடையாக உள்ள குண்டலினி, குண்டளினி, குண்டழினி ஆசிரமப் பயிற்சிகளும் ஓகாசன, யோகாசன, மோகாசன, போகாசன, தவப் பயிற்சிகளும் பூசைவிதிகளில் கூறப்பட்டிருக்கும் 1. கஞ்சா இலை, 2. கசகசா பால், 3. தென்னமரத்துக் கள், 4. பனைமரத்துக் கள், 5. ஈச்சமரத்துக் கள், 6. பதப்படுத்தப்பட்ட பழச்சாறு, 7. தேன், 8. பால், 9. கருப்பஞ்சாறு, 10. வில்வம், 11. துளசி, 12. வெட்டிவேர், 13. பறவைகளின் பசுங்குருதி, 14. வெள்ளாட்டுக் குட்டியின் பசுங்குருதி, 15. எள்நெய், 16. உண்ணுதற்குரிய நீர்வாழ், நிலம்வாழ் உயிரின இறைச்சி, ... முதலியவை முறையாக பெண்களில் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவத்திற்கு ஏற்பவும், ஆண்களில் பாலுகர், சிறாஅர், இளைஞர், நட்டாள், பெரியவர், முதியவர், கிழவர் எனும் ஏழு பருவத்திற்கேற்பவும் பயன்படுத்தியும், இந்துவேத உணவு முறையால் நோயற்ற நல்வாழ்வையும், மரணமிலாப் பெருவாழ்வையும் பெற்றிடலாம்.”

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே