13:38:41
இருக்கு வேதம் காண்டம் 13, மண்டலம் 38, நாள் உரைக்கோவை வாசகம் 41.
'இருக்குவேதத்தின்படி காவிகட்டுவதோ, மனைவியில்லாமல் சாமியாராக, சன்னியாசியாக இருப்பதோ ஏற்றுக்கொள்ள இயலாதது ஆகும்'
'ஆசிரமம், மடம், பீடம் என்று திருமணமாகாதவர்கள் சன்னியாசியாகவோ, சாமியாராகவோ, ஆச்சாரியாராகவோ இருந்து செயல்படக் கூடாது. அதுவும், தாடி, மீசை, தலைமுடியை நீக்கி விட்டு அருளுலகில் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களால், அண்டபேரண்டங்களில் இருந்து அருளாற்றலைப் பெற முடியாது! பெறமுடியாது!! பெறமுடியாது!!! பெறவே முடியாது! இப்படி இருப்பவர்கள், அதாவது தாடி, மீசை, தலைமுடி இல்லாதவர்கள் நான்கு வேதங்களில் எந்தவொரு வேதத்தையும் ஓதமுடியாது! ஓதவும் கூடாது! இவர்கள் வேண்டுமானால் உலகியலாக மதநிறுவன நிர்வாகங்களில் தலைவர்களாக செயல்படலாம். இவர்கள் பிறரை வாழ்த்துவதற்குக் கூட உரிமை கிடையாது என்று இருக்குவேதம் மிகமிகத் தெளிவாக திருமணமாகாதவர்களையும், தாடி மீசை தலைமுடி முதலியவைகளை நீக்கிக் கொண்டிருப்பவர்களையும் அருளுலகுக்கு ஏற்றவர் அல்ல' என்று கடுமையாக கண்டிக்கிறது.