Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேதம் > பத்தி 30

பத்தி 30

இந்து வேதத்தின் செயல் வடிவான இந்துமதம், தன்னால் உருவாகின்ற, அல்லது உருவாக்கப்படுகின்ற அருளாற்றல்களைச் சேமித்து அல்லது தேக்கி வைத்து உலகுக்கு வழங்குகின்ற சாதனம் அல்லது பாண்டம்தான் சக்கரம் எனப்படுவது.

இந்த சக்கரம் மூன்று பெரும் வகைகளை உடையதாகும். அதாவது, அலிநிலை ஆற்றல், பெண்நிலை ஆற்றல், ஆண்நிலை ஆற்றல் என்று மூன்று பெரும் வகையான ஆற்றல்களை உடைய சக்கரங்களையே அருளுலகின் முக்கோண அருட்பீடமாக உருவாக்கித் தருகிறது இந்து மதம்.

இதில்

  • அலிநிலைக்குரிய திருப்பதிச் சக்கரம் என்பது நூற்றெட்டு (108) வகைப்படும்,
  • பெண் நிலைக்குரிய சத்தி பீடச் சக்கரம் என்பது இருநூற்றி நாற்பத்து முன்று (243) வகைப்படும்,
  • ஆண் நிலைக்குரிய சீவாலயச் சக்கரம் என்பது ஆயிரத்தெட்டு (1008) வகைப்படும்.

இவை மூன்றின் கூட்டுத் தொகையான ஆயிரத்து முன்னூற்று ஐம்பத்தொன்பது (1359) என்ற எண்ணிக்கையும்; இவை ஒவ்வொன்றுக்கும் உரிய 108, 243, 1008 என்ற மூன்று எண்ணிக்கைகளும் சேர்த்து மொத்தமுள்ள நான்கு எண்ணிக்கைகளும் புனிதமானவைகளாக கடவுட்தன்மை உடையவைகளாக, தெய்வீக ஆற்றல் உடையவைகளாக, அருட்பாதுகாப்பு வழங்கக் கூடியவைகளாக இந்து மதம் அறிவிக்கிறது.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே