Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேதம் > பத்தி 16

பத்தி 16

இப்படி, இன்றுள்ள பதினெண் சித்தர் மடம் துவக்கியுள்ள அறிவார்ந்த அருட் பணிதான் அருளுலகப் பொருளுலக இருள்களை அகற்றும். அப்பொழுதுதான் இந்துமதம் தனது ஆழ்ந்த தூக்க, ஏக்க, வீக்க, முடக்க, அடக்க, ஒடுக்க, நடுக்க. . நிலைகளிலிருந்து விடுபட்டிடும், விடுபட்டிடும், விடுபட்டிடும்.

ஏனென்றால், பதினெண் சித்தர் மடம்தான். இந்து மதத்தின் தலைமை மடமாக, தலைமைக் குரு பீடமாக, குவலய குருபீடமாக, இந்து வேத பீடமாக, இந்து வேத நாயகமாக, இந்து மதத் தந்தையாக, இந்து மதத் தலைமை ஆச்சாரியாராக, இந்து மத மூலப் பண்டாரமாக, இந்து மத மூலப் பண்டார சந்நதியாக, இந்துமத மூலப் பண்டார சந்நிதியாக, இந்து மத மூலத் தம்பிரானாக, இந்து மத மூல ஆதீனமாக, இந்து மத மூலக் குருமகா சன்னிதானமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது, அறிவிக்கப் பட்டிருக்கிறது, அறிவிக்கப் பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பு, இந்து மதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண் சித்ததர்களாலும் பதினெட்டாம் படிக் கருப்புகளாலும் வழங்கப் பட்டதாகும்.

எனவேதான் இன்றுள்ள பதினெண் சித்தர் மடம் (காரணோடை, சென்னை-67) தனியொரு நிறுவனமாக இருந்தே மேலே குறிப்பிட்ட இந்து வேதத்திற்கும், இந்து மதத்திற்கும் உரிய அனைத்துத் துறைகளின் அல்லது அனைத்துப் பிரிவுகளின் அல்லது அனைத்து வகைப்பட்ட அங்கங்களின் மறுமலர்ச்சிக்காகவும், வளவளர்ச்சிக்காகவும், வலிமைச் செழிச்சிக்காகவும், ஆட்சிமீட்சிக்காகவும், பாடுபடப் புறப்பட்டிருக்கிறது, பாடுபடப் புறப்பட்டிருக்கிறது. பாடுபடப் புறப்பட்டிருக்கிறது.

இப்பேருண்மையினை இன்றுள்ள இந்துக்களில் கணிசமானவர்களாவது முறையாகவும், நிறைவாகவும் தெரிந்து, ஆராய்ந்து, அறிந்து, புரிந்து, தெளிந்து, உணர்ந்து, நம்பி, ஏற்றுத் தங்களால் இயன்ற துணைகளையும், ஏந்துக்களையும், ஆதரவுகளையும் நல்கிட முன் வந்தாலேயே போதும், போதும். போதும்.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே