Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேதம் > பத்தி 3

பத்தி 3

இந்த இந்து வேதம் அண்ட பேரண்டங்களை ஆளுகின்ற மூலப் பதினெண் சித்தர்கள், மூலப் பதினெட்டாம்படிக் கருப்புகள், 48 வகைப்பட்ட கடவுள்கள், 48 வகை வழிபடு நிலையினர்கள், 48 வகைச் சித்தர்கள் முதலியவர்களால் காலங்கள் தோறும் ஏற்படக் கூடிய புதிய புதிய தேவைகளுக்கேற்பத் தேவையான மாற்றங்களை யெல்லாம் செய்யப் பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகின்ற ஒன்றாகும். எனவேதான், அண்டங்கள் பேரண்டங்கள், அண்டபேரண்டங்கள் என்பனவற்றிலுள்ள எல்லா வகைப்பட்ட உலங்களிலும், இந்த இந்து வேத மதமான இந்து மதம் ஒன்றே நிலையாக இருந்து வருகின்றது. ஆனால் அவ்வப்பொழுது அந்தந்த உலகங்களின் சூழ்நிலை மாற்றங்களுக்கேற்ப துணை மதங்கள் சில இந்த இந்து வேத மதமான இந்து மதமெனும் ஆலமரத்தின் புதிய புதிய இலைகளாகவும் கிளைகளாகவும் விழுதுகளாகவும் தோன்றுவதுண்டு, ஆனால் மிகவிரைவில் அவைகளனைத்தும், தாங்கள் இந்து மதத்தின் ஒர் அங்கம்தான் என்பதை உணர்ந்து இந்துமதத்தோடு ஐக்கியமாகி விடுகின்றன. அதாவது இந்துவேத மதமான இந்துமதம் தவிர வேறு எந்த ஒரு புதிய மதம் தோன்றினாலும், அது குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் தனிப்பட்ட ஒரு மதமாகத் தனித்து இயங்காமல் இந்துவேத மதமான இந்து மதத்தோடேயே இணைந்து விடும் என்பதுதான் அருளுலக வரலாறு.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே