Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > அதர்வான வேதம் > 07:21:42

07:21:42

அதர்வான வேதம் காண்டம் 7 மண்டலம் 21 நாள் வாசகம்42

“அண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்களும், பதினெட்டாம் படிக்கருப்புகளும், தங்களுடைய தாய் மொழியும், அண்ட பேரண்டமாளும் அருளுலகக் ஆட்சி மொழியுமான அருளூறு ஆமுதத் தெய்வீகச்செந்தமிழ் மொழியில் குண்டழினி, குண்டலினி, குண்டளினி என்ற மூன்றுக்கும் செந்தமிழ் மொழிக்குரிய முன்னூற்று இருபத்து மூன்று(323) எழுத்துக்களிலும் தனித்தனி எழுத்துக்களை தேர்ந்தெடுத்து அறிவித்திருப்பதை, உடம்பில் உள்ள முப்பத்திரண்டு அங்கங்களிலும் இட்டும், தொட்டும், சுட்டியும் பதிவு செய்து கொண்ட பிறகுதான் பயிற்சியினை துவக்கவேண்டும். இல்லையேல், குண்டழினிடயும் மாயையே, குண்டலினியும் மாயையே, குண்டளினியும் மாயையே!..


மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே