23:36:46
யாம வேதம் காண்டம்: 23, மண்டலம்: 36, நாள் வாசக மலர்: 46
சாதுக்களின் வாரிசுகளாக, வழித்தோன்றல்களாக ... தோன்றிய இந்த மாஞாலத்தின் மணீசர்கள், இருக்குவேத நியதிப்படி தங்களை குறிப்பிட்ட சாதுக்களை + ஆதியாகக் கொண்டவர்கள் = குறிப்பிட்ட சாதியினர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு பல புதிய பிரிவுகளை உண்டாக்கிக் கொண்டு வருகிறார்கள். இந்த சாதுக்களை ஆதியாகக் கொண்டு உருவான சாதியினர்கள், தங்களுக்கிடையில் வேற்றுமைகளையும், உயர்வு தாழ்வுகளையும், போட்டி பொறாமைகளையும் உருவாக்கிக் வருவது தவறு. ஏனெனில் அருளுலக சாதனைகள் புரிந்து சாதுக்களாக ஆகிறவர்கள் குடும்ப ஆண்டவர்களாக மட்டும் செயலாக்கம் பெறுவதில்லை. இவர்கள் தங்கள் தங்களுடைய 1. அருவநிலை, 2. அருவுருவநிலை, 3. உருவ அருவநிலை, 4, உருவநிலை முதலியவற்றின் நிலைகளுக்கேற்பவும்; தங்களுடைய 1. திருநிலைப் பாரம்பரியம், 2. தருநிலைப் பாரம்பரியம், 3. கருநிலைப் பாரம்பரியம், 4. குருநிலைப் பாரம்பரியம் முதலியவைகளுக்கு ஏற்பவும்ல் தங்களுடைய வாழிடமான 1. கருவறை, 2. வெட்டவெளிக் கருவறை, 3, வழிபாட்டு நிலையக் கருவறை, 4. கோயில் மூலக் கருவறை என்பனவற்றிற்கேற்பவும்; தங்களை 1. குடும்ப ஆண்டவர்களாக, 2, குல தெய்வங்களாக, 3. கிராம தேவர் தேவதைகளாக, 4. நாட்டுக் கடவுளர்களாக செயலாக்கப் படுத்திக் கொள்கிறார்கள்! செயலாக்கப் படுத்திக் கொள்கிறார்கள்! செயலாக்கப் படுத்திக் கொள்கிறார்கள்! எனவே சாதிகளுக்கிடையில் வேற்றுமையோ, ஏற்றத் தாழ்வோ, உயர்வு தாழ்வோ, பிரிவினையோ, போட்டி பொறாமையோ, சண்டை சச்சரவோ பிறப்பதற்கு இடமேயில்லை! வளர்க்கப் படுவதில் பயனில்லை.