Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > யாம வேதம் > 01:08:01

01:08:01

யாம வேதம் காண்டம்: 1, மண்டலம்: 8, நாள் வாசக மலர்கள்: 1 முதல் 48 வரை.

 குடும்ப ஆண்டவர்களைப் பூசை செய்யும் நெறி முறைகள் விளக்கப் படுகின்றன. அது மட்டுமல்லாமல், இந்த முதல் காண்டத்தில் 'அருளுலக நால்வர்கள்' எனப்படும் குடும்ப ஆண்டவர்கள், குலதெய்வம், கிராம தேவர் தேவதை, நாட்டுக் கடவுளர் எனும் நால்வரையும் பற்றி ஏராளமான செய்திகள் தரப்பட்டிருக்கின்றன. குறிப்பாக,
 ஓமம், ஓகம், யாகம், யக்ஞம், வேள்வி எனும் ஐந்தீ வேட்டல் முறை பற்றியும்;
 இம்மண்ணுலக அருளுலக நால்வர்கள், மற்ற உலகங்களைச் சேர்ந்த நால்வர்கள் பற்றியும்;
 அருளுலகில் பூசை செய்யக் கூடிய திருமுறை நெறி, தருமுறை நெறி, கருமுறை நெறி, குருமுறை நெறி என்பவை பற்றியும்;
 அருளுலகத்தவர்களில் திருக்கல்கள், தருக்கல்கள், கருக்கல்கள், குருக்கல்கள் எனும் நான்கு வகைப்பட்ட அருளுலக நால்வர்கள் பற்றியும்;
 அருளுலக நால்வர்களில் அருவ நிலையினர், அருவுருவ நிலையினர், உருவ அருவ நிலையினர், உருவ நிலையினர் எனும் நான்கு வகையினரைப் பற்றியும்
மிகமிக விரிவாகவும், விளக்கமாகவும், எளிமையாகவும், தெளிவாகவும், திட்டவட்டமாகவும் வரையறை செய்யப்பட்ட பேருண்மைகள் கூறப்பட்டுள்ளன.


மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே