04:28:39
அசுரவேதம்: காண்டம்-4, மண்டலம்-28, நாள்வாக்கு-39
“எல்லா மானுடரும் தங்களுடைய எல்லையில்லா ஆசைகளாலும், வாழ்வியல் தொல்லைகளாலும், அருளுலகச் செல்வங்களான பத்தி சத்தி சித்தி முத்திகளைப் பெறுவதற்கு அதிகமாக காலத்தையோ, பயிற்சியையோ, முயற்சியையோ, பொருளையோ செலவிட முடியாது என்பதற்காகத்தான்; அன்றாடம் அல்லது வாய்ப்பும், ஓய்வும் கிடைக்கும்போது கால் யாம (சாம) நேரத்தையாவது செலவிட்டு பத்தி சத்தி சித்தி முத்திச் செல்வங்களைப் பெறுவதற்காகவே ‘அன்றாடப் பூசைமொழி’ எனும் அமுதத்தை பதினெண்சித்தர் மடத்தின் முதல் மடாதிபதியும், பீடாதிபதியுமான அந்தணர் அண்ணல், ஞானாச்சாரியார் ஆதிசிவனார் அவர்கள் இந்துவேதத்தின் ஒருபிரிவான அசுரவேதத்தில் வழங்கியிருக்கிறார்”