Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > அசுர வேதம் > 01:08:48

01:08:48

அசுர வேதம் காண்டம்: 1, மண்டலம்: 8, நாள் வாக்கு மலர்: 48

மனிதர்களாக பிறப்பவர்கள்தான் 'குடும்ப ஆண்டவர்கள்' என்று உருவாகி, ஏழு தலைமுறையினர்க்கு வழிவழியாக உதவி செய்கிறார்கள். எனவே, அருளுலக நால்வர்கள் என்று கோயில்களில் இருப்பவர்களுக்கு நேரடி பாரம்பரிய வாரிசுகளாக பிறப்பவர்கள் காலங்கள் தோறும் வாழ்ந்திடுகிறார்கள். அப்படிப் பட்டவர்களுக்குத்தான், இந்த அருளுலக நால்வர்கள் தங்களுடைய வாரிசுகளில் பத்தியும், அருள் யோகமும் உடையவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அருட்சத்திகளையும், சித்து விளையாடல் ஆற்றல்களையும், சித்துக்களை அத்து உயர்ந்திடும் சித்திகளையும், சித்திகளில் முதிர்ந்து பெற்றிடும் முத்திகளையும் வழங்கிடுகிறார்கள். எனவே, யாரும் 'எனக்கு ஏன் அருளுலக நால்வர்களான ஆண்டவர்கள் தெரிவதில்லை?! தெய்வங்கள் தெரிவதில்லை!? தேவர் தேவதைகள் தெரிவதில்லை!? கடவுளர்கள் தெரிவதில்லை!? ... என்று கேள்வி கேட்டு கலங்கி, குழம்பி, வருந்தி, புலம்பத் தேவையில்லை.



மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே