Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > அசுர வேதம் > 01:08:21

01:08:21

அசுர வேதம் காண்டம்: 1, மண்டலம்: 8, நாள் வாக்கு மலர்: 21 முதல் 28 வரை:

 மானுடரில் எல்லோரையும் போல் கூட்டத்தோடு கூட்டமாக மேயச் சென்று திரும்புகின்ற ஆடுகளைப் போல், பிறந்து இறக்கின்ற மனிதர்களுக்கிடையில் மிகுந்த தன்னம்பிக்கையாலும், பேரார்வத்தாலும் மற்ற மானுடர்களிலிருந்து மாறுபட்டு, வேறுபட்டு அரிய பெரிய முயற்சிகளை மேற்கொண்டு அசுர பத்தியால், அசுர சத்தி, சித்தி, முத்திகளைப் பெறுகிறவர்கள் தோன்றிடுகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட குடும்பத்தின் ஆண்டவர்களாக மட்டும் இல்லாமல்; அக்குடும்பத்தார்களைச் சேர்ந்த அனைவர்க்கும் குல தெய்வங்களாக மாறுவார்கள். அம்மட்டின்றி அக்குலத்தார்கள் மிகுதியாக வாழுகின்ற கிராமத்துக்கு அக்கிராம தேவர் தேவதைகளாக மாறுவார்கள் அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பல கிராமங்களிலும் குடியேறி செல்வாக்குப் பெறும் போது கிராம தேவர் தேவதைகளாக மாறிய குடும்ப ஆண்டவர்களே நாட்டுக் கடவுளர்களாக மாறிடுவார்கள்' என்பதேயாகும்.
  இதன் மூலம் குடும்ப ஆண்டவர்கள் என்பவர்கள் குல தெய்வங்களாகவும், கிராம தேவர் தேவதைகளாகவும், நாட்டுக் கடவுளர்களாகவும் மாறுகிறார்கள் என்ற பேருண்மை தெரிகிறது. இதனால் அருளுலகில் ஆண்டவர், தெய்வம், தேவர், தேவதை, கடவுளர் எனப்படுகிற நால்வரிலும் மனிதர்களாகப் பிறந்தவர்களும் உண்டு என்ற பேருண்மை விளக்கமாகிறது. இதன் அடிப்படையில்தான் அருளுலகில் உள்ள ஆண்டவர், தெய்வம், தேவர், தேவதை, கடவுளர்களுக்கு மனிதர்களைப் போலவே விருப்பு, வெறுப்புகள் உண்டு; அன்புடன் ஆதரிப்பதும், நீதியுணர்வோடு கண்டிப்பதும், தண்டிப்பதும் உண்டு; மனித வாழ்வில் இருக்கின்ற எல்லா வகையான பழக்க வழக்கங்களும் உலகியல் நடைமுறைகளும் 'அருளுலக நால்வர்க்கும்' உண்டு.
 (அருளுலக நால்வர் என்பது 1. குடும்ப ஆண்டவர், 2. குல தெய்வம், 3. கிராம தேவர் தேவதை, 4. நாட்டுக் கடவுளர் என்போரைக் குறிக்கும்.)


மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே