Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > சொல் விளக்கம் > பத்தி 6

பத்தி 6

இந்த பொருளாழம் மிக்க சீரிய செந்தமிழ்ச் சொல்லான மதமென்ற சொல்லை பொருளாழமிக்க அழகிய இனிய செந்தமிழ்ச் சொல்லான இந்து என்ற சொல்லோடு சேர்ந்து இந்து மதம் என்ற ஒரு சொல் உருவாக்கப் பட்டிருக்கிறது.

அதாவது, மூலப் பதினெண் சித்தர்கள் ஆழச் சிந்தித்தும், நீள நினைத்தும்தான் இந்த இந்துமதம் என்ற சொல்லை உருவாக்கி யிருக்கிறார்கள், உருவாக்கி யிருக்கிறார்கள், உருவாக்கி யிருக்கிறார்கள்.

அதன் பயனாகத்தான் இந்த இந்துமதம் பிண்டங்கள், அண்டங்கள், பேரண்டங்கள், அண்டபேரண்டங்கள் அனைத்திற்கும் உயிர் மூச்சான இந்து வேதத்தின் செயல் வடிவமாக வாழுகிறது, வாழுகிறது, வாழுகிறது.

இந்த அரிய கருத்தை இந்தப் பெரிய செய்தியை இந்து வேத மதமான இந்து மதம் என்ற சொற்றொடர் விளக்குகிறது.

இந்தச் சொற்றொடர் மூலப் பதினெண்சித்தர்கள், பதினெட்டாம்படிக் கருப்புகள், அனைத்து வகைப்பட்ட சித்தர்கள், கடவுள்கள், வழிபடு நிலையினர்கள், ஆச்சாரியார்கள், பதினெண்சித்தர் பீடாதிபதிகள். . முதலியவர்களின் எழுத்துக்களில் கணக்கற்ற முறை இடம் பெற்றிருப்பதன் மூலம் இந்து வேதத்தின் செயல் வடிவம்தான் இந்துமதம் என்பதைத் தெளிவாக அறியலாம், எளிமையாகப் புரியலாம், விளக்கமாக உணரலாம்.

இத்துடன், இந்துமதம் என்று சொல்லப் படுகின்ற ஒரு மதம் திடீரென்று ஞானமோ, கடவுட் காட்சியோ, தெய்வீகச் சாட்சியோ, அருட்சித்தியோ அடைந்திட்ட ஒரு தனி மனிதனால் தோற்றுவிக்கப் பட்ட ஒன்றல்ல, ஒன்றல்ல, ஒன்றல்லவே அல்ல என்று இம்மண்ணுலகுக்கு இந்த இந்து மதத்தை அரசியல் பூர்வமாக அறிவித்த முதல் பதினெண்சித்தர் மடாதிபதியும், பீடாதிபதியும், ஞானாச்சாரியாருமான ஆதிசிவனாரின் வாசகத்தையும் இங்கு எண்ணிப் பார்த்திடல் வேண்டும், எண்ணிப் பார்த்திடல் வேண்டும், எண்ணிப் பார்த்திடல் வேண்டும்.

அப்பொழுதுதான், இந்து மதத்தின் அளப்பரிய, எல்லையற்ற விரிந்து பட்ட அரிய பெரிய சீரிய நேரிய வீரிய நிலைமைகளை யெல்லாம் ஒரளவாவது தெரிய முடியும், தெரிய முடியும், தெரிய முடியும், தெரிந்தறிய முடியும், தெரிந்தறிய முடியும், தெரிந்தறிய முடியும், அறிந்து புரிய முடியும், அறிந்து புரிய முடியும், அறிந்து புரிய முடியும், புரிந்து உணர முடியும், புரிந்து உணர முடியும், புரிந்து உணர முடியும்.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே