பத்தி 9

இந்துவேதம் கணக்கற்ற தனித்தனிப் பிரிவுகளை உடையாதாகும். அதாவது அருளுலகப் பொருளுலக வாழ்வியலுக்குத் தேவையான அனைத்து வகைப்பட்ட செய்திகளும் மிகமிகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட தனித்தனித் துறைகளாகப் பிரித்து வகுத்து வழங்கப் பட்டிருக்கின்றன.

இவற்றுக்குள் அடங்காத உணர்வுகளோ, எண்ணங்களோ, கருத்துக்களோ, செயல்களோ, செய்திகளோ எதுவும் இல்லை, இல்லை, இல்லை, இல்லவே இல்லை, இருக்க முடியாது, இருக்க முடியாது, இருக்க முடியாது.

எனவேதான், இந்த இந்துவேதம் அல்லது இந்த இந்து வேத மதமான இந்து மதம் ஒரு சமுதாய இயலே ஆகும் என்று பதினெண் சித்தர்களால் மிகத் தெளிவாகப் பல இடங்களில் எழுதப் படுகிறது.

மேலும் பதினெண் சித்தர்களே, இந்த இந்து வேதமே இந்த உலகில் தோன்றிடக் கூடிய அனைத்து வேதங்களுக்கும் விதைப் பண்ணையாக, நாற்றுப் பண்ணையாக என்றென்றும் இருந்திடும் என்று மிகமிகத் தெளிவாகவும், விளக்கமாகவும் பல இடங்களில் எல்லா நூல்களிலும் குறிப்பிடுகிறார்கள்.

இது பற்றி, பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் விளக்கம் அளிக்கும் பொழுது இந்து வேதம், இம்மண்ணுலக வேதங்களுக்கு எல்லாம் தாயாகவும், மூலமாகவும், முதலாகவும், அடிப்படையாகவும், உள்ளீடாகவும், உயிராகவும் விளங்குகிறது,

எனவேதான், இந்த இந்து மதத்தில் மதமாற்றம் பற்றிய கருத்தோ, சிந்தனையோ எள்முனையளவு கூட இல்லை, இல்லை, இல்லை, இல்லவே இல்லை என்று மிகத் தெளிவாகக் குறிக்கிறார்கள்.

அதாவது, பெயரளவில் இம்மண்ணுலகில் எத்தனை மதங்கள் இருந்தாலும் சரி, எத்தனை எத்தனைக் கோயில்களும், வழிபாட்டு முறைகளும் தோன்றினாலும் சரி; அனைத்தும் இந்து வேதத்துக்கு உட்பட்டவைதான் என்ற கருத்தையே பதினெண் சித்தர்கள் அழுத்தந் திருத்தமாக, ஆணித் தரமாகக் கூறுகிறார்கள், கூறுகிறார்கள், கூறுகிறார்கள்.

எனவேதான், இந்துமதம் யாண்டும் பரவியுள்ள இந்துமத இந்தியாவிற்குள் எத்தனை எத்தனை அன்னிய வேத மதங்கள் வந்து என்னென்ன கடுமைகளையும், கொடுமைகளையும் சிதைவுகளையும், சீரழிவுகளையும் செய்திட்டாலும் அவற்றோடு நிலையான போட்டி பொறாமைப் போராட்டங்களையோ, பகைமைப் போர்களையோ உருவாக்காமல் வாழுகிறது.