பத்தி 24

இந்துவேதம் இந்த உலகத்தை நான்கு வகைப்பட்ட நிலங்களாகப் பகுத்து நானிலம் என்று பெயரிட்டாலும்; மானுட வாழ்வியலைப் பொருளுலக வாழ்வியலாகவும், அருளுலக வாழ்வியலாகவும் பகுக்கும் பொழுது இந்த உலகை ஐந்து வகைப்பட்ட பிரிவுகளாகப் பிரிக்கவேண்டிய கட்டாய நிலைக்கு வந்து விட்டது.

எனவேதான்,

என்று ஐந்து வகைப்பட்ட நிலங்களாகப் பகுத்து இந்த ஐந்து வகைப்பட்ட நிலப்பகுப்புக்களே இந்து வேதத்தின் செயல்வடிவான இந்து மதத்திற்கு உரியவைகளாக அறிவிக்கப் பட்டு விட்டன.

அதாவது இந்து வேதத்தின்படி இந்த நிலம் நான்கு வகைப் பிரிவுகள் உடைய நானிலமாகும், ஆனால் இந்து மதப்படி இந்த உலகம் ஐந்து வகை நிலப்பரப்புக்களை உடைய ஐநிலமாகும்.

இந்த ஐந்நில மக்களின் வாழ்வே ஐந்திணை வாழ்வாகும்.

இந்த ஐந்திணை வாழ்வின் அருளுலக இணைப்பே "ந,ம,சி,வா,ய = நமசிவாய, ப,ரா,ச,த்,தி = பராசத்தி, சி,வா,ய,ந,ம = சிவாயநம" என்ற ஐந்தெழுத்துப் பூசை மொழியாயின.

இவற்றின் விரிவுகளும், பிரிவுகளுமாகத்தான்

என்று உருவாக்கப்பட்டன.

இவையே இந்து வேதத்தின் செயல் வடிவான இந்து மதத்தின் அமைப்புகளாகும்.