பத்தி 21

மேலே குறிப்பிட்டது போல் இந்துவேதம் ஒன்றில்தான் பகுத்தறிவுப் பூர்வமான ஆராய்ச்சிகளைப் பல்வேறு வகையினர்கள் கணக்கற்ற கோடியாண்டுகள் நிகழ்த்திக் கண்டறிந்த உண்மைகள் மிகுதியாக இருக்கின்றன.

இதுமட்டுமல்ல இந்த இந்து வேதத்தில்தான் இந்து வேதத்தின் அருளுலகத்தவர்களான

முதலியோர் அனைவரையுமே எவர் வேண்டுமானலும் முறையான பயிற்சி முயற்சிகளால் காண முடியும், காண முடியும், காண முடியும் என்றும்; கண்ணால் காண்பவர்களோடு எல்லா வகையான தொடர்புகளையும் உருவாக்கிக் கொள்ள முடியும் அல்லது வளர்த்துக்கொள்ள முடியும் என்றும் மிகத் தெளிவான செயல்முறைகளைப் பெற்றிருப்பதுதான் இந்துவேதம்.

இவற்றால்தான் இந்து வேதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய மூலப் பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும், இந்து வேதத்தால்தான் அருளுலகப் பொருளுலக இருள்களுக்கும், இன்னல்களுக்கும் முடிவு காணப்பட்டு விடிவு உருவாக்கப்படும் என்று அழுத்தந் திருத்தமாக, ஆணித்தரமாகக் குறிக்கப் படுகிறது.

இப்படி இந்து வேதம் எல்லா வகையான செல்வங்களையும் வழங்குகின்ற ஒர் ஒப்புயர்வற்ற தனிப்பட்ட அண்ட பேரண்டங்கள் அனைத்திலும் பரவிய மாபெரும் வேதமாக இருக்கின்ற காரணத்தினால்தான்; இதனுடைய தொடர்பும், அடிப்படையும், உதவியும், உள்ளீடும்... இல்லாமல் எந்த ஒரு வேதமும் எந்த உலகத்திலும் சரி தோன்ற முடியாது, தோன்ற முடியாது, தோன்ற முடியாது, தோன்றவே முடியாது என்ற கருத்து முடிவாகக் கூறப்படுகிறது.