பத்தி 20

இந்து வேத்தின்  விண்ணியல்  மண்ணியல்  அளவு

மூலப் பதினெண் சித்தர்களுடைய இந்து வேதம் அண்டங்கள், பேரண்டங்கள் அண்டபேரண்டங்கள் முழுவதும் பரவியிருக்கின்ற ஒன்று என்பதனால், இது இந்த மண்ணுலகியலின் இயல்புகளுக்கும், இயக்கங்களுக்கும் விண்ணியலோடு உள்ள தொடர்புகளையெல்லாம் முழுமையாக ஆராய்ந்து தேவையான உண்மைகளையெல்லாம் இந்து மதத்தின் வாழ்வியலாக வார்த்தெடுத்துத் தருகிறது.

அதாவது இந்த இந்து வேதத்தில்தான்

முதலிய மிகப் பெரிய பெரிய வினாக்களுக்கெல்லாம் மிகமிகத் தெளிவான நேரடியான வரையறுக்கப்பட்ட பதில்களைப் பெற்றிருக்கிறது.

எனவேதான், இந்து வேதம்

முதலிய அனைத்தையும் கண் இமை தானாக இமைக்கின்ற நேரத்தை அடிப்படையாகக் கொண்டு மிகமிக நுட்பமாகவும் திட்பமாகவும் வரையறுக்கப்பட்ட அளவுகளைப் பெற்றனவாக உருவாக்கியிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாகத்தான் ஒவ்வொரு நாளின் பெயர், மாதத்தின் பெயர், ஆண்டின் பெயர், விண்மீன்களின் பெயர், இராசிகளின் பெயர், கோள்களின் பெயர், ஒரு நாளின் ஆறுகாலப் பெயர், எட்டு யோக நிலைப் பெயர், ஆண்டின் ஆறு பருவங்களின் பெயர் முதலியவைகள் அனைத்தும் மிகமிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் வரையறுத்து வழங்கப் பட்டிருக்கின்றன இந்து வேதத்தால்.

இவையனைத்தையும் அண்டபேரண்டம் முழுவதையும் ஆளும் அனைத்து வகைப்பட்ட பதினெண் சித்தர்கள், பதினெட்டாம்படிக் கருப்புகள், சித்தர்கள், வழிபடு நிலையினர்கள், கடவுள்கள், தேவியர்கள், தேவதைகள், தேவர்கள், கணங்கள், இருடிகள், முனிவர்கள் முதலியோர் கணக்கற்ற கோடி கோடி ஆண்டுகளாக ஆராய்ந்தறிந்தே உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பகுத்தறிவுப் பூர்வமான பயன்மிக்க ஆராய்ச்சி முடிவுகளை உடைய ஒரே ஒரு வேதம் இந்து வேதம்தான்.