48:47:39
யாம வேதம்: காண்டம்-48, மண்டலம்-47, நாள்வாசகம்-39
“அண்ட பேரண்டங்களில் அருளாட்சி புரியும் இந்துவேதமான இருக்குவேதம், இம்மண்ணுலகத்தாருக்கு மட்டும் செயல்படுத்தப் படுகின்ற வாக்கு, வாக்கியம், வாசகம் என்ற நிலைகளுக்கேற்ப அசுரவேதம், அதர்வான வேதம், யாம வேதம் என்ற மூன்றுபெரும் பிரிவுகளைப் பெற்று நான்கு வேதங்களாக ஞானவள்ளல், அருட்கொடை வள்ளல், இந்துவேத நாயகம், பதினெண்சித்தர் மடாதிபதி, பீடாதிபதி ஆதிசிவனாரால் விண்ணுலக ஐவர் குழுவையும், மண்ணுலக ஐவர் குழுவையும் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கிறது. இந்த நான்கு வேதங்களும் (4,42,368) உரைக்கோவைகளை, வாக்குகளை, வாக்கியங்களை, வாசகங்களைப் பெற்றிருப்பதால் இவ்வளவையும் மனிதர்கள் படித்துப் பயன்படுத்திட இயலாது என்பதால், நான்கு வேதங்களின் சாரத்தை அகச் சத்தியை, பேராற்றலை எளிதாக எல்லா மானுடரும் பெற்றிடுவதற்காக அன்றாடம் கால்யாம நேரத்திற்குள் ஓதுவதற்குரிய அன்றாடப் பூசைமொழி எனும் நான்வேதச் சுருக்கம் ஆதிசிவனாரால் இறுதியில் உருவாக்கப் பட்டது. இதை முறையாகப் பயன்படுத்துகிறவர்கள் பத்தி, சத்தி, சித்தி, முத்திகளை எளிதில் பெறுவதற்குரிய ஓகாசனம், யோகாசனம், மோகாசனம், போகாசனம் எனும் நான்கையும் பயிற்சி முயற்சிக்குரிய தேர்ச்சி முதிர்ச்சிகளைப் பெற்றிடுவர்.