Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > யாம வேதம் > 48:47:39

48:47:39

யாம வேதம்: காண்டம்-48, மண்டலம்-47, நாள்வாசகம்-39

 “அண்ட பேரண்டங்களில் அருளாட்சி புரியும் இந்துவேதமான இருக்குவேதம், இம்மண்ணுலகத்தாருக்கு மட்டும் செயல்படுத்தப் படுகின்ற வாக்கு, வாக்கியம், வாசகம் என்ற நிலைகளுக்கேற்ப அசுரவேதம், அதர்வான வேதம், யாம வேதம் என்ற மூன்றுபெரும் பிரிவுகளைப் பெற்று நான்கு வேதங்களாக ஞானவள்ளல், அருட்கொடை வள்ளல், இந்துவேத நாயகம், பதினெண்சித்தர் மடாதிபதி, பீடாதிபதி ஆதிசிவனாரால் விண்ணுலக ஐவர் குழுவையும், மண்ணுலக ஐவர் குழுவையும் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கிறது. இந்த நான்கு வேதங்களும் (4,42,368) உரைக்கோவைகளை, வாக்குகளை, வாக்கியங்களை, வாசகங்களைப் பெற்றிருப்பதால் இவ்வளவையும் மனிதர்கள் படித்துப் பயன்படுத்திட இயலாது என்பதால், நான்கு வேதங்களின் சாரத்தை அகச் சத்தியை, பேராற்றலை எளிதாக எல்லா மானுடரும் பெற்றிடுவதற்காக அன்றாடம் கால்யாம நேரத்திற்குள் ஓதுவதற்குரிய அன்றாடப் பூசைமொழி எனும் நான்வேதச் சுருக்கம் ஆதிசிவனாரால் இறுதியில் உருவாக்கப் பட்டது. இதை முறையாகப் பயன்படுத்துகிறவர்கள் பத்தி, சத்தி, சித்தி, முத்திகளை எளிதில் பெறுவதற்குரிய ஓகாசனம், யோகாசனம், மோகாசனம், போகாசனம் எனும் நான்கையும் பயிற்சி முயற்சிக்குரிய தேர்ச்சி முதிர்ச்சிகளைப் பெற்றிடுவர்.


மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே