11:27:39
யாம வேதம் கா-11, ம-27, நா.வாசகம்-39
ஐந்தீ வேட்டலும், முத்தீ ஓம்பலில் வள்ளி நிலையும், கொடிநிலையும் இரவில் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன. மேலும், இரவில் செய்யப்படும் முத்தீ ஓம்பலில் கந்தழி நிலை எனப்படும் சூரியனின் வழிபாட்டிற்கு பதிலாக திருவிளக்கின் சுடர் ஒளி பயன்படுத்தப் படுகிறது.
இதே விளக்கின் சுடர் ஒளி நண்பகலில் அசுர வேதத்திற்காகவும், காலை, மாலை அதர்வான வேதத்திற்காகவும், காலை, மாலை, மதியம் ஆகிய மூன்று வேளைகளிலும் இருக்கு வேதத்திற்காகவும், முத்தீ ஓம்பலில் வள்ளிநிலை எனப்படும் திங்களுக்காகவும், கொடிநிலை எனப்படும் விண்மீனுக்காகவும் பதிலியாகப் பயன்படுத்தப் படுகிறது.
எனவே, இரவு பகல் எந்நேரத்திலும் விளக்கின் சுடரொளியைப் பூசை செய்வது,
ஓமத்தீ ஒளி,
ஓகத்தீ ஒளி,
யாகத்தீ ஒளி,
யக்ஞத்தீ ஒளி
வேள்வித்தீ ஒளி
கந்தழி எனும் சூரியனின் ஒளி,
வள்ளி எனும் திங்களின் ஒளி (நிலவு, சந்திரன்)
கொடிநிலை எனும் விண்மீனின் ஒளி
ஆகிய எட்டு ஒளிகளுக்கும் உரிய ஒரே ஒரு வாரிசு அருட்சுடர் ஒளியாக விளங்குகிறது.