Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > யாம வேதம் > 11:27:39

11:27:39

யாம வேதம் கா-11, ம-27, நா.வாசகம்-39

ஐந்தீ வேட்டலும், முத்தீ ஓம்பலில் வள்ளி நிலையும், கொடிநிலையும் இரவில் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன. மேலும், இரவில் செய்யப்படும் முத்தீ ஓம்பலில் கந்தழி நிலை எனப்படும் சூரியனின் வழிபாட்டிற்கு பதிலாக திருவிளக்கின் சுடர் ஒளி பயன்படுத்தப் படுகிறது.

இதே விளக்கின் சுடர் ஒளி நண்பகலில் அசுர வேதத்திற்காகவும், காலை, மாலை அதர்வான வேதத்திற்காகவும், காலை, மாலை, மதியம் ஆகிய மூன்று வேளைகளிலும் இருக்கு வேதத்திற்காகவும், முத்தீ ஓம்பலில் வள்ளிநிலை எனப்படும் திங்களுக்காகவும், கொடிநிலை எனப்படும் விண்மீனுக்காகவும் பதிலியாகப் பயன்படுத்தப் படுகிறது.

எனவே, இரவு பகல் எந்நேரத்திலும் விளக்கின் சுடரொளியைப் பூசை செய்வது,
ஓமத்தீ ஒளி,
ஓகத்தீ ஒளி,
யாகத்தீ ஒளி,
யக்ஞத்தீ ஒளி
வேள்வித்தீ ஒளி
கந்தழி எனும் சூரியனின் ஒளி,
வள்ளி எனும் திங்களின் ஒளி (நிலவு, சந்திரன்)
கொடிநிலை எனும் விண்மீனின் ஒளி
ஆகிய எட்டு ஒளிகளுக்கும் உரிய ஒரே ஒரு வாரிசு அருட்சுடர் ஒளியாக  விளங்குகிறது.


மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே