Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 32:36:47

32:36:47

இருக்கு வேதம் காண்டம்-32, மண்டலம்-36, நாள் உரைக்கோவை வாசகம் 47
“இப்பரந்த வையகத்தில் இயற்கையாக, பல்வேறான தட்ப வெப்ப நிலைகளுக்கும், மண்வளங்களுக்கும், நீர் வளங்களுக்கும் ஏற்ப அணுக்கள், உயிரணுக்கள், அருளணுக்கள் இணைத்தும் பிரித்தும் கூடியும் கணக்கற்ற வகைவகையான பயிரினங்களும், உயிரினங்களும் தோன்றியதுபோலவே, ‘கணக்கற்ற வடிவ, வண்ண, உருவ, தோற்ற, அங்க, அழகு வடிவங்களில் வெவ்வேறான அமைப்புக்களை உடைய மானுடர்கள் தோன்றியுள்ளனர். இவர்கள் தொடர்ந்து பிறப்புக்கள் தோறும் அவரவர்கள் தோன்றிய இடங்களிலேயே தொடர்ந்து தோன்றிடுவர் என்பதனால்; அவரவர் தங்கள் தங்களுடைய நாட்டையும், நாட்டாரையும், இனத்தையும், இனத்தாரையும், மொழியையும், மொழியாரையும் விரும்பி போற்றிப் பாதுகாத்து பெருமிதமிக்க உரிமைமிக்க வாழ்வுடன் வாழச் செய்திடல் வேண்டும். அதனால், தம்மைப் போலவே ஒவ்வோர் நாட்டாரும், இனத்தாரும், மொழியாரும், அவர்க்குரிய நாட்டையும், நாட்டாரையும், மொழியையும், மொழியாரையும், இனத்தையும், இனத்தாரையும் கெடுதலே வராத விடுதலை வாழ்வு, உரிமைமிக்க பெருமிதவாழ்வு வாழுதற்கு உதவிடல் வேண்டும். இதற்காகவே, இந்துவேதம் நாட்டு விடுதலை, இன விடுதலை, மொழி விடுதலை எனும் முக்கோண தத்துவப் பீடத்தையே இந்துவேத பீடமாக அறிவிக்கிறது.


மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே