Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 07:19:29

07:19:29

இருக்கு வேதம் காண்டம்-7, மண்டலம்-19, நாள் உரைக்கோவை வாசகம் 29
“அண்ட பேரண்டமாளும் மூலப் பதினெண்சித்தர்கள் தங்களோடு பதினெட்டாம்படிக் கருப்புகளையும், கடவுளர்களையும், வழிபடு நிலையினர்களையும், சித்தர்களையும், மற்றவர்களையும் அவ்வப்போது துணையாக அழைத்துக் கொண்டு இம்மாஞாலத்தில் கல்தோன்றி மண் தோன்றாக் காலம் முதலே வந்து சென்று; அருட்கொடையாக இந்துவேதத்தையும், இந்துமதத்தையும் தேவைக்கேற்ப வழங்கியுள்ளனர். எனவேதான், பயிரினங்களுக்கும், உயிரினங்களுக்கும் வரக்கூடிய அனைத்து வகைப்பட்ட நோய்நொடிகளுக்குரிய சித்த மருத்துவத்தையும், சித்தர் மருத்துவத்தையும் இந்துவேதத்திலும், இந்துமதத்திலும் வழங்கியுள்ளனர். இதில் மிகத் தெளிவாக உயிருக்கு வரக்கூடிய நோய்கள், உடலுக்கு வரக்கூடிய நோய்கள், அவற்றிற்குரிய மருந்துகள் அனைத்தையும் வழங்கியுள்ளனர். இம் மருத்துவ முறைகள் உலகம் முழுவதுமுள்ள அனைத்து வகைப்பட்ட நாட்டாருக்கும், இனத்தாருக்கும், மொழியாருக்கும் பயன்படக் கூடியவை. இருப்பினும் உலகம் முழுவதும் உள்ளாருக்குப் பயன்படக் கூடிய மருந்துகளைத் தயாரிப்பதற்குரிய கற்கள், மணல்கள், மண்கள், நீர்கள், உப்புகள், உலோகங்கள், ... அதிக அளவில் இந்துவேதமும், இந்துமதமும் பிறந்த தமிழ்நாட்டில் திருவிடத்தில் இந்தியாவில் மிகுதியாக இருக்கின்றன, கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கும் சித்த மருத்துவ முறைகளும், சித்தர் மருத்துவ முறைகளும் என்றென்றும் இலைமறை காயாக, நிலவறைக் கருவூலப் பொருள்களாக இருப்பதை உணர்ந்து உலகோர் உய்வு பெறல் வேண்டும்.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே