Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 07:19:27

07:19:27

இருக்கு வேதம் காண்டம்-7, மண்டலம்-19, நாள் உரைக்கோவை வாசகம் 27
“அனைத்து வகையான பயிரினங்களுக்கும், உயிரினங்களுக்கும் தலைவராக, ஈசராக தோன்றிட்ட மணீசர்கள்; தங்கள் விருப்பம் போல் கண்டதையெல்லாம், விரும்பியதையெல்லாம் உண்டு நோயுற்று அவதிப்பட்டதால், அண்ட பேரண்டங்களிலிருந்து வந்திட்ட அருளுலகத்தவர்கள் பரந்து பட்ட இப்பூவுலகில் வாழுகின்ற வெவ்வேறு வகையான உடல்கூறுகளுடைய மானுட இனத்தார்கள் தங்கள் தங்களுடைய வட்டாரங்களில் இயற்கையாகக் கிடைக்கக் கூடிய பயிரினங்களிலும், உயிரினங்களிலும் எவையெவற்றை எப்படிச் சமைத்து உண்ண வேண்டும்? எவையெவற்றை எப்படிச் சமைத்து உண்ண வேண்டும்? என்பதை விளக்கிடுவதற்காக உணவுநூல், அடுக்களை சாத்தர, சாத்திர, சாத்திற நூல்கள், மடநூல், சாத்தர, சாத்திர, சாத்திறங்களை என்பனவற்றை மிகத் தெளிவாக திட்டவட்டமாக எழுதி அருளியுள்ளனர். இதன்படி, கூடுமானவரை அந்தந்த நாட்டார், வட்டாரத்தார், இயற்கையாகத் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய பயிரினங்களையும், உயிரினங்களையும் உணவுக்குப் பயன்படுத்துதலே நோயற்ற வாழ்வைத் தரும்”.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே