01:47:02
இருக்கு வேதம் காண்டம்-1, மண்டலம்-47, நாள் உரைக்கோவை வாசகம்-2
(ii) தருமுறை: ‘அவரவர் விருப்பத்திற்கும் வசதி வாய்ப்பிற்கும், சூழ்நிலைக்கும், துணைக்கும், ஏந்திற்கும் ஏற்பக் கிடைக்கக் கூடிய பயிரினங்கள், வேர், தண்டு, இலை, பூ முதலியவைகளை உதிரியாகவும், சரமாகவும், மாலையாகவும் கட்டிப் பயன்படுத்தியும், அத்துடன் பயிரினங்களின் கிழங்கு, தண்டு, இலை, பூ, காய், கனி முதலியவைகளை சமைத்துப் பக்குவப் படுத்தியும், சமைக்காமலும் படையலிட்டும்; தம் விருப்பம்போல் குரல் எழுப்பியும், பாடல் பாடியும், கருவிகளை இசைத்தும், ஆட்டங்கள் ஆடியும், அருளுலகத்தவரிடம் பத்தி செலுத்தும் பத்தி நெறிமுறை வழியே தருமுறை’.