Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > அதர்வான வேதம் > 48:02:05

48:02:05

அதர்வானவேதம் காண்டம்-48, மண்டலம்-2, நாள்வாக்கியம்-5:

“இந்துவேதம், இருக்குவேதத்தில் வெளிப்படையாக வழங்கிடாமல் வழங்கிய அதர்வான வேத வாக்கியங்களின் எழுத்துக்களும், சக்கரங்களும் அத்தர, அத்திர, அத்திற ஓச்சுக்களும், அருவ அருவுருவ உருவருவ உருவ சித்திகளும் முறையாகவும், நிறைவாகவும் யுகயுகமாக மானுட மேம்பாட்டிற்கு பயன்பட வேண்டுமென்பதற்காகவே அதர்வான வேதம் வகுக்கப்பட்டது. ஆனால், இதன் அரிய பெரிய சாதனைகளால் கூட இவ்வுலக மூலவேதமாக, முதல்வேதமாக, மானுட இனங்களின் பொதுவேதமாக, காலங்கள் தோறும் கடவுளர்களாலேயே தேவைக்கேற்ப சுருக்கி எழுதித் தரப்பட்டும், விரிவாக செயலாக்கப்பட்டும், அருளப்படும் இந்துவேதத்தை மறந்தும், துறந்தும், மறுத்தும், வெறுத்தும், புறக்கணித்தும், புறப்படுகின்ற புதுவேதங்களாலும், நான்காவது விஞ்ஞானத்தின் சாதனைகள் மிகுந்திடும். அப்பொழுது மானுடர் அனைத்து அகப்பண்பாடுகளையும், புற நாகரீகங்களையும், அறிவியல் சாதனைகளையும் அழித்தொழிக்கும் வெறிநிறைந்த அசுர வாழ்க்கை மேற்கொள்வார்கள். அதற்கும் இந்துவேத நாயகங்களான அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்களே முடிவையும், விடிவையும் நல்கிட; இந்துவேதத்தையும், இந்துமத வாழ்வியலையும் மறுமலர்ச்சியும், வளவளர்ச்சியும், ஆட்சிமீட்சியும் அடையச் செய்திடுவர்.”


மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே