48:02:05
அசுரவேதம் காண்டம்-48, மண்டலம்-2, நாள்வாக்கு-5:
“இருக்கு வேதமான இந்துவேதத்தில் இலைமறை காயாக ஞானம், அகஞானம், புறஞானம், விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் எனும் ஐந்துக்குமுரிய ஒன்பது கலைகளும் கூறப்பட்டு விட்டதால்; பல்வேறு வகையான எதிர்பாராத தீயவிளைவுகள் விளைந்து விட்டதால், அனைத்தையும் அடக்கி ஆளும் அசுர சத்தி, சித்திகளைத் தரக்கூடிய வித்தைகளுக்குரிய முத்தமிழ் எழுத்துக்களும், சக்கரங்களும், பூசைமொழிகளும், பூசைவிதிகளும், இருபத்தி மூன்று (23) வகைப்பட்ட காயந்திரிகளும், குருபீடங்களின் நம்பிக்கைக்குரியவர்கள் மூலமாவது மானுடர்க்குக் கிடைத்திடுவதற்காக அசுரவேதம் அருளப்பட்டது. எப்பொழுதாவது குருவுக்கு அடங்காத, கட்டுப்படாத அசுர சத்தி சித்திகளைப் பெற்ற அசுரர்கள் தோன்றிடுகிறார்கள். அவர்களை உரிய காலத்தில் வென்று கொன்று அடக்கிட யுகங்கள் தோறும் தோன்றிடும் அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்களின் அருளாணை பெற்ற அண்டபேரண்ட அருளுலகத்தவர்கள் செயல்பட்டிடுகிறார்கள். ஆனால், ஆனால், ஆனால், இந்துவேதமும், இந்துமதமும் நான்காவது ஞானமான விஞ்ஞானத்தை வளர்த்திடாதே என்று கூறுகின்ற அறிவுரையை மீறினால்; மானுடரில் பாலுகர், சிறாஅர், இளைஞர், நட்டாள், பெரியவர், முதியவர், கிழவர் எனும் ஏழு பருவத்து ஆண்களிலும்; பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழுபருவத்துப் பெண்களிலும் கணக்கற்றுத் தோன்றிடும் அசுர வெறியுணர்வுடைய அசுரர்களை அடக்கி அழித்து மானுடரைக் காப்பது அரிது”.