Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேதம் > பத்தி 27

பத்தி 27

என்றிப்படி, இந்து வேதம் என்று தலைப்பிட்டு முதல் யுகம் முடிந்து இரண்டாவது யுகத்தில் தோன்றிய பதினெண் சித்தர் பீடாதிபதிகள் எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

அதாவது முதல் யுகம் முடிந்து மிகப்பெரிய கடல் கோள் ஏற்பட்டு, அதனால் இளமுறியாக் கண்டத்திலிருந்த தென் இமயமலையும், அதைச் சார்ந்த பெரும் பகுதியும் கடலுக்குள் மூழகி புதிய புதிய கண்டங்களும், சிறிய பெரிய தீவுகளும் புதிதாகத் தோன்றி; அங்கெல்லாம் பயிரினங்களும், உயிரினங்களும், மனிதர்களும் தோன்றி இரண்டாவது யுகத்தில் பல்வேறு இனங்களும், மொழிகளும், மதங்களும், இளமுறியாக் கண்டத்தோடு தொடர்பு கொண்டு வாழ்ந்திட்ட காலத்தில் தோன்றிய பதினெண் சித்தர் பீடாதிபதிகளே இந்து வேதம், இந்து வேத மதமான இந்து மதம் என்று தலைப்பிட்டுப் பல நூல்களை எழுதினார்கள்.

அவை இந்து, வேதம், மதம், இந்து வேதம், இந்து மதம் என்ற ஐந்து சொற்களுக்கும் தனித் தனியாகப் பொருள் விளக்கம் கூறும் நூல்களாகவே சிறப்புற்று விளங்குகின்றன. காலப் போக்கில் தோன்றிய பதினெண் சித்தர் பீடாதிபதிகள் இந்த ஐந்து தலைப்புக்களிலும் இந்து வேதம், இந்து மதம் என்ற இரண்டு தலைப்புக்களில் மட்டும் சிறப்பாக விளக்குகின்ற நூல்களை எழுதினார்கள்.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே