Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேதம் > பத்தி 24

பத்தி 24

இந்துவேதம் இந்த உலகத்தை நான்கு வகைப்பட்ட நிலங்களாகப் பகுத்து நானிலம் என்று பெயரிட்டாலும்; மானுட வாழ்வியலைப் பொருளுலக வாழ்வியலாகவும், அருளுலக வாழ்வியலாகவும் பகுக்கும் பொழுது இந்த உலகை ஐந்து வகைப்பட்ட பிரிவுகளாகப் பிரிக்கவேண்டிய கட்டாய நிலைக்கு வந்து விட்டது.

எனவேதான்,

  • மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி,
  • காடும் காடு சார்ந்த இடம் முல்லை,
  • வயலும் வயல் சார்ந்த இடம் மருதம்,
  • கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்,
  • முல்லையும் குறிஞ்சியும் எதிர்பாராமல் இயற்கையின் சீற்றத்தால் வளம் குன்றி திரிந்தால் பாலை

என்று ஐந்து வகைப்பட்ட நிலங்களாகப் பகுத்து இந்த ஐந்து வகைப்பட்ட நிலப்பகுப்புக்களே இந்து வேதத்தின் செயல்வடிவான இந்து மதத்திற்கு உரியவைகளாக அறிவிக்கப் பட்டு விட்டன.

அதாவது இந்து வேதத்தின்படி இந்த நிலம் நான்கு வகைப் பிரிவுகள் உடைய நானிலமாகும், ஆனால் இந்து மதப்படி இந்த உலகம் ஐந்து வகை நிலப்பரப்புக்களை உடைய ஐநிலமாகும்.

இந்த ஐந்நில மக்களின் வாழ்வே ஐந்திணை வாழ்வாகும்.

இந்த ஐந்திணை வாழ்வின் அருளுலக இணைப்பே "ந,ம,சி,வா,ய = நமசிவாய, ப,ரா,ச,த்,தி = பராசத்தி, சி,வா,ய,ந,ம = சிவாயநம" என்ற ஐந்தெழுத்துப் பூசை மொழியாயின.

இவற்றின் விரிவுகளும், பிரிவுகளுமாகத்தான்

  • எல்லா வகையான அருளுலக மந்தரம், மந்திரம், மந்திறம், மாந்தரம், மாந்தரீகம் என்ற ஐந்தும் அருளுலகக் கடவுள்கள் அனைவரையும் அன்றாடப் பூசையில் போற்றிப் பேணிப் பாதுகாத்து வளர்த்திடவும்;
  • தந்தரம், தந்திரம், தந்திறம், தாந்தரம், தாந்தரீகம் எனும் ஐந்தும் அருளுலகிலுள்ள அனைத்து வகைப்பட்ட கடவுள்களை உருவாக்கு வதற்கும், அதாவது தோற்றுவிப்பதற்கும்;
  • எந்தரம், எந்திரம், எந்திறம், ஏந்தரம், ஏந்தரீகம் எனும் ஐந்தும் அருளுலகிலுள்ள அனைத்து வகைப்பட்ட கடவுள்களையும் மற்ற அனைத்து வகைப்பட்டவர்களையும் இயக்குவதற்கும்

என்று உருவாக்கப்பட்டன.

இவையே இந்து வேதத்தின் செயல் வடிவான இந்து மதத்தின் அமைப்புகளாகும்.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே