பத்தி 22
இப்படி
- இந்து வேதம் தோன்றிய இடம் கடலுள் மறைந்த இளமுறியாக் கண்டம் என்பதும்;
- இந்த இந்து வேதம் தோன்றி இன்றைக்கு 1991ம் ஆண்டு என்ற கணக்குப்படி 4373092 ஆண்டுகளுக்கு முன்னால் இம்மண்ணுலகில் தோற்றுவிக்கப் பட்டது என்பதும்;
- இந்த இந்து வேதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கியவர்கள் அண்டபேரண்டமாளும் பதினெண் சிததர்களும் பதினெட்டாம்படிக் கருப்புகளும் ஆவார்கள் என்பதும்;
- இந்த இந்து வேதம் நான்கு யுகங்களாக வாழ்ந்து வருகிறது என்பதும்;
- இந்த இந்து வேதத்தில் தான் எண்ணியல் அறிவு, கணக்கியல் அறிவு, எழுத்தியல் அறிவு, இலக்கிய இயல்அறிவு, விண்ணியல் அறிவு, விண்ணியல் இயக்க அறிவு, மண்ணியல் அறிவு, மண்ணியல் இயக்க அறிவு முதலிய கணக்கற்ற அறிவுகள் வளர்க்கப்பட்டுள்ளன என்பதும;
பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் படைப்புகளில் மிகத் தெளிவாக அறிவிக்கப் படுகின்றன.