Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > சொல் விளக்கம்

சொல் விளக்கம்

இந்து, வேதம், மதம், இந்து வேதம், இந்து மதம்

1. இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்),

அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .;

ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..;

இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ;

உண்மை, உய்வு, உயர்வு, உயிர், உரிமை, உறவு, உற்சாகம், உருவம், உருவஅருவம், உலகம், உள்ளொளி. . .;

ஊக்கம், ஊற்றுக்கண், ஊடகம் . . .;

எல்லா, எச்சம், எழுத்தருளி . . . ;

ஏற்றம், ஏந்து, ஏகம்,

ஐயன், ஐந்தரம், ஐந்திரம், ஐந்திறம், ஐம்பூதம், ஐந்தெழுத்தான்...;

ஒலி, ஒளி, ஒண்மை, ஒட்பம், ஒழுக்கம், ஒன்றுதல், ஒற்றுமை ...;

ஓமம், ஓகம், ஓதம், ஓதுதல், ஓங்காரம். . .;

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கடவுள், கல்வி, கன்னி, கரு, கதை, காதை, கவிதை (காவியம், காப்பியம்). கீதை... ;

சத்தி, சத்து, சத்தியம், சமயம், சமுதாயம், சமத்துவம், சகோரத்தத்துவம், சமாதானம், சந்திப்பு, சங்கமம், சங்கம், சித்து, சித்தம், சிவன் சுருதி.. .;

தமிழ், தலைவன், தன்னொளி, தரு, தண்ணீர், தன்னையறிதல், தலைவனையறிதல், தவம், திரு.. .;

பற்று, பந்தம், பண்பு, பதி, பசு, பழக்கம், பராசத்தி, பசுமை, பிறமண், பிண்டம், பேரண்டம், பகலவன், பகவதி, பாசம், பாவை, பூ, பூசை, போதம்,

ஞானம், ஞாலம், ஞாயிறு,

நலம், நல்வாழ்வு, நம்பிக்கை, நட்பு, நமசிவாயம், நங்கை, நாயகி, நாராயணன், நேமம், நியமம், நிடதம், நிட்டை, நீதி, நாதம், நெறி...;

மனம், மதம் மகிழச்சி, மறை, மகாசத்தி, மகேசுவரன், மகேசுவரி, மங்கை, மறை, முறை, மீமாம்சை.. .;

யக்ஞம், யாகம், யோகம், வள்ளல், வள்ளண்மை, வல்லமை, வணக்கம், வாழ்த்து, வெற்றி, வேகம், வேதம், வேள்வி வையகம்...;

என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப் பட்டிருக்கின்றன.

இவை போன்று நூற்றுக் கணக்கில் ஏராளமான சொற்கள் இந்து என்ற சொல்லுக்கு பொருள் கூறுவனவாக மூன்றாவது யுகத்திற்கு முன்பே இருந்ததாக ஒன்பதாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் வைகையாற்றங்கரைக் கருவூறார் அவர்களும்; எட்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் அவர்களும் குறிக்கிறார்கள்.

இப்படி, இந்த இந்து என்ற ஒரு சொல் ஒர் ஒப்புயர்வற்ற பொருட்செறிவும், பொருளாழமும் மிக்க அழகிய இனிய அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ்ச் சொல்லாகும்.

இந்த இந்து எனும் சொல்லே அண்ட பேரண்டமாளும் பதினெண்சித்தர்களுடைய தத்துவங்களையும், செயல் சித்தாத்தங்களையும், கொள்கைகளையும், குறிக்கோள்களையும், கோட்பாடுகளையும், சாதனைகளையும், போதனைகளையும் அருட்கொடைகளையும் முழுமையாகக் குறிக்கின்ற ஒரே ஒரு சொல்லாகும்.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே